கடந்த சில மாதங்களுக்கு முன்பு வன்புணர்வு செய்த பெண்ணை ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் எரித்த சம்பவம் உன்னாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 90% சதவீத காயங்களுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பீகார் காவல் துறைக்கு உட்பட்ட உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் உன்னாவ் என்ற இடத்தில் 20 வயது பெண்ணை 5 பேர் கடந்த மார்ச் மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஒரு குற்றவாளி தலைமறைவாக இருந்தார்.